கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி விளையாட்டு விழா

கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி விளையாட்டு விழா

விளையாட்டு விழா

புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது.

புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் ஜெஜெ செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் 28-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கல்லூரி நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் செயலர் என். சுப்பிரமணியன், நிர்வாக அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுமித்ரா கல்லூரி நாள் ஆண்டறிக்கை வாசித்தார்.

விளையாட்டுத் துறை ஆசிரிய கேத்ரின் ஜாய் செல்வகுமாரிகேத்ரின் ஜாய் செல்வகுமாரி விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வுபெற்ற விளையாட்டுத் துறை பேராசிரியர் என்.எஸ். சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். முடிவில், பேரா. நிமேஷா நன்றி கூறினார்.

Tags

Next Story