கார்த்திகை தீபத் திருவிழா : காவடி பழனி ஆண்டவர் கோவிலில் பரணி தீபம்

கார்த்திகை தீபத் திருவிழா : காவடி பழனி ஆண்டவர் கோவிலில் பரணி தீபம்

தீப திருவிழா 

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து முருகனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் தீபம், காவடி பழனியாண்டவர், தட்சிணாமூர்த்தி, சர்வலோக சமேத, சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டு, பழனியாண்டவருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story