ஆட்சீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார ருத்ராபிஷேகம்

ஆட்சீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார ருத்ராபிஷேகம்
 சோமவார ருத்ராபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமும் ஆகும். இந்த ஆண்டு ருத்ராபிஷேக விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழைக்கன்றுகள் ஆகியவை கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாலை 5 மணி அளவில் வேத பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் ஏகா தச ருத்ர பாராயணம் செய்துக்கொண்டே மூலவர் ஆட்சீஸ்வரர் உமையாாட்சீஸ்வரர் சுவாமிகளுக்கு தொடர்ந்து 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு 11 வகையான பிரசாதங்கள் வைத்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையும் விழா குழுவினரும் செய்திருந்தனர்.

Tags

Next Story