காரை வேகமாக ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம்

காரை வேகமாக ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம்
கார் விபத்தில் 3 பேர் படுகாயம்
காரை வேகமாக திருப்பி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

கரூர் அருகே காரை வேகமாக ஓட்டிச் சென்று வேகமாக திருப்பியதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கார்த்திகேயன், பழனிச்சாமியின் சகோதரர் மனைவி மணிமேகலை மற்றும் அவரது சகோதரர் சிவா ஆகிய நான்கு பெரும் அவர்களுக்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தனர். காருடையாம்பாளையம் அருகே செல்லும்போது காரை ஓட்டுநர் வேகமாக திருப்பிதால் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் பயணித்த பழனிச்சாமி, மணிமேகலை, கார்த்திகேயன் ஆகிய மூன்று பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிச்சாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர

Tags

Next Story