சுய நல அரசியல் செய்கிறார் ஸ்டாலின் - கரு.நாகராஜன்

சுய நல அரசியல் செய்கிறார் ஸ்டாலின் - கரு.நாகராஜன்

கரு நாகராஜன் 

முதல்வர் ஸ்டாலின் சுயநல அரசியல் செய்வதாக பாஜக மாநில துணை தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பில் பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சிகளிடத்தில் குழப்பமும், பதட்டமும் நிலவுகிறது என்றார். மேலும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பெற்ற இடங்களை கூட இத்தேர்தலில் பெற இயலாது எனவும், பாரதப் பிரதமர் மோடியை கடவுளாகத்தான் நாட்டு மக்கள் பார்க்கின்றனர் என்றும், பிரதமர் மோடியின் பேச்சை தவறாக புரிந்து கொண்டு, சுயநல அரசியலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என தெரிவித்தார்.

Tags

Next Story