கலைஞர் கைராசிக்காரர் அவர் தொட்டது துலங்கும் - அமைச்சர் மா.சு புகழாரம்!

கலைஞர் கைராசிக்காரர் அவர் தொட்டது துலங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் கூறினார்.

கோவை:சூலூர் பகுதியில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் மூன்று அதிநவீன மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.பின்னர் வாழ்த்துரை வழங்கி பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையை 1990 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 200 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 2000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை விரிவடைந்துள்ளது. இதன் மூலம் கலைஞர் கருணாநிதி கைராசிக்காரர் என்பதும் அவர் தொட்டது துலங்கும் என்பதும் நிரூபணமாகியுள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதயமாற்று அறுவை சிகிச்சை,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில் தற்போது கல்லீரல்,தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை உட்பட எட்டு பொறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஐந்து லட்சம் ரூபாய் அளவில் மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.1500 மருத்துவ மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story