தனி நபர் வேலை வாய்ப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 3250 பேருக்கு தனி நபர் வேலை வாய்ப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில்,மாவட்டத்தில் முதல் முதலில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் வேலைக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது.

கருங்குழி பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 3250 பேருக்கு அந்தந்த வார்டு பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதனை பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story