புதிதாக கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி

புதிதாக கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி

புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை

ரூ 8.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிய நாடக மேடை திறப்பு விழா.

கரூர் அருகே கட்டளையில் ரூ 8.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிய நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரங்கநாதபுரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை எம்எல்ஏ சிவகாமசுந்தரி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

பின்னர் புதிதாக திறக்கபப்ட்ட நாடக மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, நாடக மேடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story