பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்தில் இளம்பெண் படுகாயம்

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்தில் இளம்பெண் படுகாயம்

பைக் மீது லாரி மோதி விபத்து


சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டியதால் டாரஸ் லாரி மோதி விபத்து

இளம்பெண் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துள்ளானதில் பைக்கில் சென்ற பெண் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் பகுதியைச் சேர்ந்த லஸிகா திண்டுக்கல் - கரூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். செல்லாண்டிபட்டி ஆதி திராவிடர் காலனி பிரிவு அருகே சென்ற போது, பொன்னரசன் ஓட்டி வந்த ஈச்சர் வாகனம், லஸிகாவின் வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த லஸிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லஸிகா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பொன்னரசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Tags

Next Story