கரூர் எம்பி தொகுதி- ஓபிஎஸ் அணி சார்பில் ஏடிபி கணேசன் விருப்பமனு

கரூர் எம்பி தொகுதி- ஓபிஎஸ் அணி சார்பில் ஏடிபி கணேசன் விருப்பமனு

விருப்ப மனு அளித்த கணேசன்

கரூர் எம்பி தொகுதி- ஓபிஎஸ் அணி சார்பில் ஏடிபி கணேசன் விருப்பமனு அளித்ததை தொடர்ந்து கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏடிபி கணேசன். இவர் அதிமுக ஓபிஎஸ் அணியின், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை முன்னிறுத்தும் வகையில் விருப்பமனு தாக்கல், நேர்காணல் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பமான அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதன் பேரில், சென்னையில் ஏடிபி கணேசன் கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விருப்பமனு தாக்கல் நிகழ்வை சிறப்பித்தனர். விருப்பமான தாக்கல் செய்த ஏடிபி கணேசனுக்கு கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story