சட்டவிரோத மதுவிற்பனை - கிளிக்குஞ்சு மீது வழக்கு பதிவு.

சட்டவிரோத மதுவிற்பனை - கிளிக்குஞ்சு மீது வழக்கு பதிவு.

பைல் படம் 

சின்ன தாராபுரம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட, பள்ளபாளையம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ். அப்போது பள்ளபாளையம், வடக்கு தெரு பகுதியில் வசித்து வரும், கிளிக்குஞ்சு என்கிற குணசேகரன் வயது 53 என்பவர், அவரது வீட்டின் அருகாமையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 12- குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிளிக்குஞ்சு என்கிற குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story