காட்பாடி: வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது!

காட்பாடி: வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது!

கைது

காட்பாடி அருகே வாலிபரை கத்தியால் குத்திய நபரை காட்பாடி காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் வீரக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளி தினேஷ்குமார் (21). இவர் தனது நண்பர்கள் பிரகாஷ் (21), பிரசாந்த் (22) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு பழைய காட்பாடி வெள்ளைக்கல் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் (29) என்ற வாலிபர் குறுக்கே வந்துள்ளார். அதற்கு தினேஷ் தரப்பினர் ஓரமாக செல்லும்படி அவரிடம் கூறினர்.இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் தினேஷ்குமாரை மார்பிலும், முதுகிலும் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தினேஷ்குமாரின் தந்தை வெற்றிவேல் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

Tags

Next Story