கட்டபொம்மன் விழா; திருவுருவச் சிலைக்கு மரியாதை

கட்டபொம்மன் விழா; திருவுருவச் சிலைக்கு மரியாதை

  பாஞ்சாலங்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆண்டுதோறும் சித்திரை திங்கள் கடைசி வெள்ளி அன்று சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் - 2024 தேர்தல் நடத்தை விதிகள் 16.03.2024 முதல் நடைமுறையில் உள்ளதால் அவ்விதிகளுக்குட்பட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் இன்று நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ம.பிரபு , கூடுதல் காவல் காண்காணிப்பாளர் சி.உண்ணிகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story