காட்டுமன்னார்கோவில்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

காட்டுமன்னார்கோவில்: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
பைல் படம் 
சோழத்தரம்- ஸ்ரீமுஷ்ணம் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான சோழத்தரம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து ஜனவரி 28ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஜனவரி 29ஆம் தேதி நெடுஞ்சாலைதுறை மூலம் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது‌.

Tags

Next Story