காட்டுமன்னார்கோவில்: பெட்டிக்கடைக்கு சீல் வைப்பு

காட்டுமன்னார்கோவில்: பெட்டிக்கடைக்கு சீல் வைப்பு

  காட்டுமன்னார்கோவில் அருகே ஈச்சம்பூண்டியில் அத்துமீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

காட்டுமன்னார்கோவில் அருகே ஈச்சம்பூண்டியில் அத்துமீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஈச்சம்பூண்டி கிராமத்தில் பெட்டிகடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக திருநாவுக்கரசு என்பவர் மீது காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் கலெக்டர் உத்தரவின்படி சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், போலீஸ் ஏட்டு முருகவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈச்சம் பூண்டி கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசின் பெட்டிக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Next Story