கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்

கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் ஆனது இன்று (23- 02 -2024) நாகர்பாளையம் ஊராட்சியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் முனைவர் பா. செந்தில் குமார், கல்லூரியின் செயலாளர் வே. கவிதா செந்தில்குமார், முதல்வர் ரா. விஜயகுமார், சிறப்பு விருந்தினர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் திலகம் மகத்துவம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சே. ராஜேஷ், ஜி. செந்தில்குமார், த.மூ கோகுல்நாத், ச. ஜெயந்தி, மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இச்சேவை முகாமில் கலந்து கொண்டு நாகர்பாளையம் ஊராட்சி சேவை மையத்தில் நெகிழிகளை அகற்றி தூய்மை செய்தனர்.

Tags

Next Story