கெங்கையம்மன் சிரசு திருவிழா

கெங்கையம்மன் சிரசு திருவிழா

குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடந்தது.

குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை கிராமத்தில் ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

முன்னதாக கடந்த 14-ந் தேதி கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 25-ந் தேதி திருக்கல்யாணமும், நேற்று இரவு ஆஞ்சநேயர்சுவாமி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. நேர்த்தி கடனாக கிராமமக்கள், பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டனர். தொடர்ந்து அம்மன் சிரசு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story