துர்க்கை அலங்காரத்தில் கெங்கையம்மன் வீதி உலா

துர்க்கை அலங்காரத்தில் கெங்கையம்மன் வீதி உலா

வீதி உலா 

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் உற்சவர் மேளதாளங்களுடன் வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது. 2 மற்றும் 3-வது நாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. 4-வது நாளில் மறுகாப்பு அணிவித்தல் மற்றும் உற்சவர் கெங்கையம்மனுக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்களுடன் வீதி உலா நடந்தது.

பக்தர்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) புஷ்ப பல்லக்கு மற்றும் 29-ந்தேதி (புதன்கிழமை) தேர் திருவிழாவும், சிரசு ஏற்றம் விஸ்வரூப காட்சி தரிசனமும் நடக்கிறது. நேற்றைய உற்சவ ஏற்பாடுகளை பெரியவீடு வகையறாவினர் செய்து இருந்தனர்.

Tags

Next Story