கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூரில் பேரூராட்சி கூட்டம்

கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூரில் பேரூராட்சி கூட்டம்

பேரூராட்சி அலுவலகம் 

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வீரகனூர் பேரூராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் கமலா சுப்பிரமணியம், துணை தலைவர் அழகுவேல் தலைமை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மின்கலன் இயங்கும் வாகனம் ரூ.7,89,600 வாங்குதல், 2023-24 தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுதிட்டத்தில் 9, 10வது வார்டு பகுதிகளில் தார்சாலை, சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.117.75 லட்சம் ஒதுக்குதல் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தெடாவூர் பேரூராட்சி கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் வேல் தலைமை வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன், துணை தலைவர் மாதேஸ்வரி முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கெங்கவல்லி பேரூராட்சி கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமை வைத்தார். செயல் அலுவலர் சாந்தி, துணை தலைவர் மருதாம்பாள் முன்னிலை வைத்தனர். இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story