குண்டுவெடிப்பு சம்பவம்: கோவையில் தேவாலயங்களுக்கு பலதந்த பாதுகாப்பு

குண்டுவெடிப்பு சம்பவம்: கோவையில் தேவாலயங்களுக்கு பலதந்த பாதுகாப்பு

சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்


கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடித்தது. தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.மேலும் 36 பேர் காயமடைந்த நிலையில் 17 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாநகரின் முக்கிய தேவாலயங்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 2 வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும்கோவை மாநகர காவல்துறை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story