கேலோ -இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான்

திண்டுக்கல்லில் நடந்த கேலோ -இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகளின் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினைமாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.போட்டியானது ஆண்கள் பெண்கள் என தனி தனியாக நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அஞ்சலி ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் பெண்களுக்கும், விளையாட்டு அரங்கம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அஞ்சலி ரவுண்டானா, MVM அரசினர் மகளிர் கல்லூரி வரை 5 கிலோமீட்டர் தூரம் ஆண்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story