கேலோ- இந்தியா சைக்கிளத்தான் : போக்குவரத்து மாற்றம்

கேலோ- இந்தியா  சைக்கிளத்தான் : போக்குவரத்து மாற்றம்
தாம்பரம் மாநகர காவல் துறை 
கேலோ-இந்தியா சைக்கிளத்தான் போட்டி நடைபெறவுள்ளதால் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்றும் வரும் கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுகளின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையில், வரும் ஜன.26,27,28- ஆகிய தேதிகளில் காலை 5 முதல் பகல் 12 மணி வரை சைக்களத்தான் போட்டி நடத்தப்படவுள்ளது. அதனால் போட்டிகள் நடைபெறும் நேரங்களில் கிழக்கு கடற்கரைச் சாலையில், கோவளம் சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் மாா்க்கத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களை மாற்று வழியில் ஓ.எம்.ஆா் சாலை மாா்க்கமாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் வலது புறம் திரும்பி ஓ.எம்.ஆா் சாலையை அடைந்து இடது புறம் திரும்பி கேளம்பாக்கம், திருப்போரூா் வழியாக மாமல்லபுரம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story