இலவச வீட்டுமனை பட்டாவுக்கு கமிஷன் கேட்டு பெண்ணுக்கு அடி உதை

இலவச வீட்டுமனை பட்டாவுக்கு கமிஷன் கேட்டு பெண்ணுக்கு அடி உதை
பைல் படம்
மாங்கோடில் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு கமிஷன் கேட்டு பெண்ணிடம் தகராறு செய்த ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வன் மனைவி சாந்திகுமாரி (42). கடந்த நான்காம் தேதி அவருக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இந்த பட்டா கிடைத்ததற்காக தனக்கு கமிஷன் தர வேண்டுமென அதே பகுதியை சேர்ந்த பிரமோத் 45) என்பவர் சாந்தி குமாரியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் பிரமோத் அவரது மனைவி சவிதா (37), மகன் சூர்யா (20),அதே பகுதியை சேர்ந்த விஜி மனைவி கவிதா (35), விஜு (40) ஆகியோர் கும்பலாக சாந்தி குமாரியின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து ஐந்து பேரும் சேர்ந்து சாந்தி குமாரியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த சாந்தி குமாரி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அடுமனை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story