சிறுமியை கடத்திய வாலிபர் கைது!

சிறுமியை கடத்திய வாலிபர் கைது!

கைது

சிறுமியை புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்ப கத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் காமராஜை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி: கீரமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஆலங்குடி அருகே உள்ள கொத்த கோட்டையை சேர்ந்த அரங்குளவன் மகன் காமராஜ்(24) என்பவர் சிறுமியை கடத்தி சென்று கோயம்புத்தூரில் தங்கியிருப்பது தெரியவந் ததையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று இருவரையும் நேற்று முன்தினம் மீட்டு கீரமங்கலம் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். சிறுமியை புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்ப கத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் காமராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story