கீழ்வேளுரில் 110லிட்டர் சாராயம் பறிமுதல்

கீழ்வேளுரில் 110லிட்டர் சாராயம் பறிமுதல்

காவல் நிலையம்

காரைக்காலில் இருந்து கீழ்வேளுருக்கு கடத்திய 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டச்சேரி மெயின் ரோட்டில் போலீசார் நேற்று வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் புதுச் சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கீழ்வேளூர் அருகே தேமங்கலம் பிள்ளை யார்கோயில் தெருவை சேர்ந்த பாண்டியன் (36) என்பது தெரியவந்தது. மேலும் இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதன்பின் னர் போலீசார் பாண்டியனை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story