தொளசம்பட்டியில் சிறுமியை கடத்தல்: போலீசார் விசாரணை

தொளசம்பட்டியில் சிறுமியை கடத்தல்: போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

தொளசம்பட்டியில் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை தொளசம்பட்டி அருகே உள்ள துண்டுமானியம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருடைய மகன் ரமேஷ் என்ற இளைஞர் கடந்த 16ஆம் தேதி மாட்டு பொங்கல் அன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் இளைஞர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Tags

Next Story