தீப்பிடித்து ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

தீப்பிடித்து ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

 ஆட்டுக்குட்டிகள்

மானாமதுரை அருகே தீ பற்றி எரிந்ததில் ஆடுகள் உயிரிழந்தன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை அருகே கீழக்கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்த நடராஜன் மற்றும் பீக்குளத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் தங்களது ஆடுகளை மேலப்பசலை கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் கிடை அமைத்து மேய்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டுக்குட்டிகளை கிடப்புகளில் அடைத்து வைத்துவிட்டு, ஆடுகளை மேய்க்க அழைத்துச் சென்றனர். இந்நிலையில் திடீரென விளைநிலங்களில் காய்ந்திருந்த புற்கள் தீப்பற்றியுள்ளது. இதில் கிடப்புகளில் இருந்த நடராஜனுக்கு சொந்தமான 30 குட்டிகள், முருகனுக்கு சொந்தமான 8 குட்டிகள் கருகி உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து கீழப்பசலை விஏஓ மீனா மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story