கிள்ளியூர் ஒன்றிய அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் 

கிள்ளியூர் ஒன்றிய அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் 
அதிமுக ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திக்கோடு ஊராட்சி உட்பட 25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என கேட்டு கிள்ளியூர் ஒன்றிய அதிமுக சார்பில் மத்திகோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திகோடு ஊராட்சி மன்ற தலைவர் அல்போன்சாள் தலைமை வகித்தார்.

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான்தங்கம், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் நசரேத் பசலியான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் மேரி கமலா பாய், மடாலம் ஊராட்சி தலைவர் டாக்டர் விஜயகுமார், குமரி மாவட்ட ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அஜித் குமார் மற்றும் கிளாடிஸ் லில்லி, மரியதாஸ், ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story