மழலையர் வகுப்புகளுக்கான பட்டமளிப்பு விழா

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் இன்று மழலையர் வகுப்புகளுக்கான பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது.

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் இன்று மழலையர் வகுப்புகளுக்கான பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது. மழலையர் வகுப்பினை முடித்து அடுத்த வகுப்பிற்கு தகுதி பெரும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவின் முக்கிய நோக்கமானது மாணவ மாணவியர்கள் சிறு வயதிலேயே குழந்தை பருவத்திலேயே பட்டங்களை பெறுவதன் மூலம், அவர்களுக்கு தாங்கள் மென்மேலும் படித்து பல்வேறு பட்டங்களையும் சான்றிதழ்களையும் பெற்று வாழ்வின் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பள்ளி தாளாளர் திருமதி பூர்ணிமா கார்த்திகேயன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து குழந்தைகளும் தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்று சிறப்பான முறையில் செயல்பட்ட அனைத்து மாணவ மாணவியர்களையும் பாராட்டி பள்ளி தலைவர் திரு எஸ் ஏ கார்த்திகேயன் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story