கத்தியை காட்டி பணம் பறிப்பு - மாணவர் உட்பட 3 பேர் கைது !

கத்தியை காட்டி பணம் பறிப்பு  - மாணவர் உட்பட 3 பேர் கைது !
கைது
நாகர்கோவிலில் கத்தியை காட்டி பணம் பறித்த மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (50) இவர் தொழிலாளி. நேற்று இவர் அங்குள்ள நாடான்குளம் பகுதி பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பதிசாரத்தை சேர்ந்த முகில் (21), நவீன் குமார் (23) மற்றும் கிருஷ்ணன் (19) ஆகிய மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து உதயகுமரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி உதயகுமாரிடம் இருந்து ரூபாய் 380 பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகில், நவீன் குமார், கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் கைதான கிருஷ்ணன் என்பவர் பெங்களூரில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story