குடை பிடித்தபடி மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த சுற்றுலாப்பயணிகள்

குடை பிடித்தபடி மலர் கண்காட்சியை பார்த்து ரசித்த சுற்றுலாப்பயணிகள்

மலர் கண்காட்சி

கொடைக்கானலில் நேற்று மிதமான மழை பெய்த நிலையில் பிரையண்ட் பூங்காமலர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர்களை குடைபிடித்தவாறு சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, மேலும் பல மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் பிற்பகல் வேளையில் சுமார் 1 மணி நேரமாக மிதமான மழை பெய்தது,பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி நடைபெறுவதால் நேற்று பெய்த மழையினை சுற்றுலாப்பயணிகள் பொருட்படுத்தாமல் மழையில் குடைகளை பிடித்து கொண்டு பூங்காவில் பூத்துள்ள வண்ணமலர்களை கண்டு ரசித்தனர்,

Tags

Next Story