பிரையண்ட் பூங்கா லேசர் ஷோ - சுற்றுலாப்பயணிகள் உற்சாக நடனம்

பிரையண்ட் பூங்கா  லேசர் ஷோ - சுற்றுலாப்பயணிகள் உற்சாக நடனம்

லேசர் ஷோ

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற லேசர் ஷோவில் சுற்றுலா பயணிகள் உற்சாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் மலர் கண்காட்சி நேற்று முந்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது, இதனையடுத்து நேற்று மாலை வேளையில் தோட்டக்கலை துறை சார்பாக சுற்றுலாப்பயணிகளுக்கு லேசர் ஷோ நடத்தப்பட்டது, இந்த ஷோவில் தேசியக்கொடி பறப்பது போன்றும்,இந்தியா வரைபடம் அமைத்தும்,ஆதித்தியா எல்1 ராக்கெட் செல்வதும் போன்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அனைவரும் கை கோர்க்கும் விதமாக ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது,

மேலும் வண்ண வண்ண கதிர் வீச்சுகள் சுற்றுலாப்பயணிகள் மீது விழுந்தது சுற்றுலாப்பயணிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியது,இசை மற்றும் பாடலுடன் இந்த லேசர் ஷோ ஒளிபரப்பாக சிறுவர்கள்,பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நடனமாடி மலர் கண்காட்சியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த லேசர் ஷோ நடத்தப்பட்டது சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story