கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை- குதூகலம்

கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை- குதூகலம்

ஆலங்கட்டி மழை

கொடைக்கானல் பகுதியை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை மழை தொடங்கியனதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவி வந்தது.

இதனை தொடர்ந்து மாலை வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து,மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் 1 மணி நேரமாக மிதமான மழை பெய்தது.

குறிப்பாக போளூர்,கிளாவரை,பூண்டி,கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனையடுத்து மலைக்கிராம மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஆலங்கட்டி மழையை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன்,புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story