சேலத்தில் அன்னம்மாள் கல்லூரி சார்பில் கொங்கு நாட்டு உணவு திருவிழா

சேலத்தில் அன்னம்மாள் கல்லூரி சார்பில் கொங்கு நாட்டு உணவு திருவிழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

சேலத்தில் அன்னம்மாள் கல்லூரி சார்பில் கொங்கு நாட்டு உணவு திருவிழா நடைபெற்றது.

அன்னம்மாள் கல்லூரியின் சேலம் கிளையில் ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் கொங்கு நாட்டு உணவு திருவிழா சேலம் ஓட்டல் கணேஷ் மகாலில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக சிவராஜ் இன் ஓட்டல் சார்பில் மோகன், கிராண்ட் எஸ்டான்சியா ஓட்டல் சார்பில் ரிச்சர்ட், பிரதாப், கவிதா, அன்னம்மாள் கல்லூரியின் மேலாண்மை குழு சார்பில் குமார், யுவராஜ், வினோத் ராஜ், ஹரி கிருஷ்ணன், கவியரசு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவிற்கு கிளை தலைவர் சக்திவேல் ஜெயராமன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர்கள் சரவணன், சரண்யா, உதயம், இஸ்மாயில், மலர்விழி, ஜாபீர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த உணவு திருவிழாவில் பங்கேற்று அறுசுவை உணவுகளை உண்டனர். நிறைவாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Tags

Next Story