கொரக்கவாடி: டீ கடையில் மது விற்ற பெண் கைது

கொரக்கவாடி: டீ கடையில் மது விற்ற பெண் கைது

காவல் நிலையம் 

கொரக்கவாடியில் டீ கடையில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் காவல் துறையினர் கொரக்கவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அங்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சரோஜா டீ கடையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது.

இது குறித்து ராமநத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சரோஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story