திரவுபதி தர்மராஜா கோவிலில் கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி

திரவுபதி தர்மராஜா கோவிலில் கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி

கிருஷ்ணன் தூது 

நெமிலியில் திரவுபதி தர்மராஜா கோவிலில் கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை நெமிலியை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் உள்ள திரவுபதி தர்மராஜா கோவிலில் கடந்த இரண்டு வாரமாக அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. விழாவில் விநாயகர் வணக்கம், அர்ஜுனன் வில் வளைப்பு, திரவுபதி திருமணம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் கிருஷ்ணன் தூது நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் உள்ள திரவுபதி, கிருஷ்ணன், அர்ஜுனன், தர்மராஜா சிலைகளுக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு இசை வாத்தியங்கள் முழங்க கீர்த்தனங்கள் பாடியவாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story