கிருஷ்ணகிரி : தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி :  தென் மாவட்டங்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி திமுக சார்பில் 17 லட்சத்தில் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக சார்பாக தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், MLA அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம் .சரயு. அவர்களின் முன்னிலையில் ரூபாய் 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அரிசி, ரவை, கோதுமை, துவரம் பருப்பு, சக்கரை, குளிக்கும் சோப் மற்றும் துணி சோப், டீ,தூள், மளிகை பொருட்கள் அடங்கிய 2000 பைகள் மற்றும் 3667 ஆடைகள் வழங்கப்பட்டது. உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் ,அனைத்து அணிகளின்,தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,கழகச் தோழர்கள் என அனைவரும் கலந்து நிவாரண பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

Tags

Next Story