செய்யாறில் மாசி மாதம் கிருத்திகை உற்சவம்

செய்யாறில் திருத்தணிகை சுப்பிரமணியர் மாசி மாதம் கிருத்திகை உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள சின்னதெரு அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திருத்தணிகை சுப்பிரமணியர் மாசி மாதம் கிருத்திகை உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story