குடியாத்தம் : கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

குடியாத்தம் :  கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

பைல் படம் 

குடியாத்தம் அருகே வீட்டின் பின்புறம் கிணற்றில் சடலமாக கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி, இவர்களுக்கு ரவி, முரளி என்ற மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார். அதற்கு மறுநாள் அவரது இளைய மகன் முரளியும் இறந்துள்ளார். அதனால் சரஸ்வதி மனவேதனையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சரஸ்வதி வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் சரஸ்வதி பிணமாக கிடந்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களை வரவழைத்து சரஸ்வதி யின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் மற்றும் மகன் இறந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story