மேட்டூரில் ஆணழகன் போட்டியில் தங்க வென்ற மின்வாரிய ஊழியருக்கு பாராட்டு.

சேலம் மாவட்டம், மேட்டூரில் ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மின்வாரிய ஊழியருக்கு பாராட்டு விழா நடந்தது.
மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் கம்பியாளர் பிரிவில் பணி ஆற்றி வருபவர் பி.மரியர் சூசை (44). இவர் லக்னோவில் கடந்த மாதம் 30-ம் தேதி ஆல் இந்தியன் எலக்ட்ரிசிட்டி போர்டு சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார்.175 செ.மீ உயரம் பிரிவில் கலந்து கொண்ட மரியம் சூசை முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிவென்ற மரியர் சூசைக்கு தங்க பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேட்டூர் சின்ன பார்க் அதிமுக அலுவலகத்தில் மரியர் சூசை ராஜ்ய சபா எம்.பி. என்.சந்திரசேகரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு என்.சந்திரசேகரன் எம்.பி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஆணழகன் போட்டியில் மரியர் சூசை தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.

Tags

Next Story