உலக கராத்தே போட்டியில் சாதித்தவருக்கு பாராட்டு

உலக கராத்தே போட்டியில் சாதித்தவருக்கு பாராட்டு

கராத்தே போட்டி 

உலக அளவில் ‘போர்த் டான்’ பட்டத்திற்கான கராத்தே போட்டி ஜப்பானில் நடந்தது. இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட எடப்பாடியை சேர்ந்த கராத்தே வீரர் சின்னசாமி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். சின்னசாமிக்கு, கியோ குஷன் தலைவர் ஹன்ஸ்கி டைகோ ஒஸ்கி, ‘போர்த் டான்’ பட்டத்தை வழங்கினார். சின்னசாமிக்கு, மேளதாளம் முழங்க ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கியோ குஷன் கராத்தே அசோசியேஷன் தலைவர் யுனிவர்சல் சீனிவாசன், ஆலோசகர் மஞ்சுநாதன் உள்ளிட்டவர்களும் பாராட்டினர்.

Tags

Next Story