விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
ஆலங்குளம் அருகே விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம்,பூலாங்குளம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு தமிழ்நாடு அரசின் அண்ணா விருது நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசின் ‘அண்ணா விருது’ பெற்ற தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஜூலியானா டெய்சி மேரிக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பூலாங்குளம் ஊராட்சித் தலைவா் திரவியக்கனி தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன், ஆண்டிபட்டி ஊராட்சித் தலைவா் மயில்ராணி, எஸ்.எம்.சி தலைவா் மரகதவல்லி ஜெமிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள் சாந்தி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். தலைமை ஆசிரியை ஏற்புரையாற்றினாா். கிராம மக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஆனி நிா்மலா வரவேற்றாா். முப்பிடாதி நன்றி கூறினாா்.

பக்

Tags

Next Story