கூட்டுறவு வார விழா : சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு

கூட்டுறவு வார விழா : சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு
சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் மருவூர் முருகன் திருமண மண்டபத்தில் 70-வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தலைமையில் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், பனையூர் பாபு, ஆகியோர் முன்னிலையில், குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் /மேலாண்மை இயக்குனர் முருகன், இணை பதிவாளர் தமிழ்ச்செல்வி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி, சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, துணை பதிவாளர்கள் ஐஸ்வர்யா, சுடர்விழி, உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்கள் துறை அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story