மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இந்திய ஒற்றுமை பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் மினி மாரத்தான் போட்டி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது,

இறையூர் செயின் சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் எலவசநூர் கோட்டை, பேலஸ் திருமண மண்டபம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தான் போட்டியில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்கள், இதில் பெரம்பலூர் ஒன்றியம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் கலந்து கொண்டு ஓடி வெற்றி பெற்றார்

அதற்கான சான்றிதழ் பரிசு மற்றும் கேடயத்தை பெற்றார், இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் லெனின் பிரசாத்,இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நரேந்திர தேவ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இளஞ்செழியன் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கங்கை குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். சான்றிதழ் பரிசு பெற்ற மாற்றுதிறனாளி கலைசெல்வனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து மாலை பெரம்பலூர் வந்த அவருக்கு சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story