வங்கி கொள்ளையனை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

வங்கி கொள்ளையனை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

மானாமதுரை வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற குற்றவாளியை விரைந்து பிடித்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.


மானாமதுரை வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற குற்றவாளியை விரைந்து பிடித்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள பொதுத்துறை வங்கியில் திருட முயன்ற குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மானாமதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் திருட முயன்ற வழக்கில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மானாமதுரை முத்துநகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பிரசாந்த்(34) என்பவரை கைது செய்தனர். விரைந்து குற்றவாளியை கண்டுபிடித்து கைதுசெய்த தனிப்படை ஆய்வாளர் நாகராஜன் தலைமைக் காவலர்கள் வேல்முருகன், பிரபு, முதல் நிலைக் காவலர்கள் சதீஷ்குமார், சக்கர மணிகண்டன், ராஜா, நாகமணிமாறன் ஆகியோருக்கு சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story