திருவேங்கடத்தில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

திருவேங்கடத்தில்  பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

திருவேங்கடத்தில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


திருவேங்கடத்தில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் தாலுகாவில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் பள்ளி மாணவ மாணவி, ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக பள்ளி மேலாண்மை குழு பாப்பம்மாள் தலைமையில் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருப்பதி, மாணிக்கவாசகம்,வேலு, லதா, உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story