சுழல் கத்தி போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

சுழல் கத்தி போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவில் நடந்த சுழல் கத்தி சுழற்றுவதில் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாணவியை ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட மாவட்ட தலைவர் பாராட்டினார்.


மாநில அளவில் நடந்த சுழல் கத்தி சுழற்றுவதில் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாணவியை ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட மாவட்ட தலைவர் பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையேயான சுழல் கத்தி சுழற்றும் போட்டி உள் ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட் டியில் விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சமிக்ஷா, மாநில அளவில் சுழல் கத்தி சுழற்றுவதில் முதலிடம் பெற்று சுழல் கேடயம் வென்றார்.

இதையடுத்து விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயபாலன், மாணவி சமிக்ஷாவிற்கு பொன்னாடை போர்த்தி பிரசாதம் வழங்கி மேல்மருவத்தூர் ஓம் சக்தி அருளால் தேசிய அளவில் முதலிடம் பெற வேண்டுமென வாழ்த்தினார். அப்போது தொண்டர்கள் பலர் உடனிருச்தனர்.

Tags

Next Story