செங்கோட்டையில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

செங்கோட்டையில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி  பெற்ற மாணவிக்கு பாராட்டு
செங்கோட்டையில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
செங்கோட்டையில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்று ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள செங்கோட்டை விஸ்வநாத புரத்தை சேர்ந்த மாணவி இன்பாவுக்கு நேற்று நேரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான செங்கோட்டை எஸ். எம். ரஹீம், செங்கோட்டை நூலகர் கோ. இராமசாமி, விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் கற்குடி சேகர், எழுத்தாளர் முத்தரசு, ஆரிஷ் ஆகியோர் மாணவியின் இல்லம் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி இன்பா தெரிவிக்கையில் தொடர் விடாமுயற்சியின் பயனாக நான் தேர்வுக்கு தயாரகி வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்வுக்கு படிப்பதற்கு நான் முதல்வன் திட்டம் எனக்கு உதவித் தொகை வழங்கியதாக வும், தேர்வுக்கு படிப்பதற்கான ஏற்ற சூழல்கள்,

வசதிகள் அனைத்தும் செங்கோட்டை நூலகத்தில் அமைந்து இருப்ப தாகவும் தெரிவித்ததோடு நான் முதல்வன் திட்டத்திற்கும், செங்கோட்டை நூலகத்திற்கும் நன்றியை தெரிவித்தார்.

Tags

Next Story