மதுராந்தங்கத்தில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

மதுராந்தங்கத்தில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
மதுராந்தங்கத்தில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023 -- 24ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு, கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில், தமிழகம் முழுதும் இருந்து, 2, 25, 490 மாணவர்கள் பங்கேற்றனர்.

இத்தேர்வில், மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட, மோச்சேரியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த லோகேஸ்வரி, எல். என். புரத்தைச் சேர்ந்த நிரோமதி, வையாவூரைச் சேர்ந்த ஹர்ஷினி ஆகிய மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் வெற்றி பெற்ற மோச்சேரி நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த லோகேஸ்வரியை, மதுராந்தகம் வட்டார கல்வி அலுவலர் பச்சையப்பன் பாராட்டி, பரிசு வழங்கினார். இதில், தலைமை ஆசிரியை அனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

Tags

Next Story