குமாரபாளையம் : வீட்டில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து சேதம்

குமாரபாளையத்தில் மின்கசிவால் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ,மற்ற பொருட்களும் எரிந்து சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், நவசக்தி மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் கந்தசாமி 42, என்பவர் குடியிருந்து வரும் வாடகை வீட்டில் மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டியில் தீப்பிடித்துக் கொண்டதில் சமையலறை முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதில் குளிர்சாதன பெட்டி, மிக்ஸி, ஃபேன், சமையல் பாத்திரங்கள், அரிசி மூட்டை எரிந்து சேதமானது.

வீட்டின் உரிமையாளர் அண்ணாமலை, சரஸ்வதி தியேட்டர் ரோட்டில் குடியிருந்து வருகிறார். தீப்பிடித்துக் கொண்ட வீட்டின் அருகே லைன் வீடுகள் மொத்தம் 16 உள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவிற்கு தகவல் தெரிவிக்கவில்லை. மேற்படி வாடகை வீட்டில் குடியிருந்து வரும் கந்தசாமி என்பவருக்கு ராணி, 40, என்ற மனைவியும், ஜெயலட்சுமி, 22, யோகஸ்ரீ, 19 ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story